Wednesday, August 26, 2009

பழக இனிமை ! பணியில் நேர்மை !

இடம் : நுங்கம்பாக்கம் ,சென்னை.

நேரம் : இரவு 01:30

கிழமை : மீண்டும் சனி (இம்முறை சற்று மூர்க்கமாக!)

தமிழ் படங்களின் தாக்கம் என்னுள் உச்சத்தை அடைந்து ,நொந்து ,மீண்டும் கீழ் நோக்கி விரைந்து கொண்டிருந்த காலம். சென்னையில் ஒரு IT கம்பெனியில் வேலை பார்த்து கொண்டிருந்தேன்.கல்லூரி நண்பர்களுடன் ஒரு வீடு எடுத்து தங்கி இருந்தேன். சில நண்பர்களை வார இறுதியில் தான் பார்க்க முடியும் . மற்ற நேரங்களில் கவுண்டர் பாணியில் "நா ரொம்ப பிஸி" என்பர். பொதுவாக Bachelors மத்தியில் "சனி இரவு காய்ச்சல்" (Saturday Night Fever) மிகுந்து காணப்படும். பலர் சரக்கு அடித்து பரவச நிலைக்குத் தள்ளப்படுவர்.அந்த பழக்கம் இல்லாத சிலர் நல்ல ஹோட்டல் போய் நன்றாக மொக்கி விட்டு திரையரங்கிற்குச் சென்று தலைவிதியே என்று ஏதேனும் தமிழ் படத்தைப் பார்பர். இதில் முதலில் குறிப்பிட்ட பழக்கம் இல்லாததால் நான் இரண்டாம் ரகம்.
அன்று இரவு நானும் , எனது நண்பன் அய்யப்பனும் தீபாவளி வெளியிடான "சிவகாசி" படத்திற்கு போகலாம் என்று முடிவு செய்து "உதயம்" திரையரங்கிற்குச் சென்றோம் ."சிவகாசி" அய்யப்பனின் சொந்த ஊர்,அதனால் சிறிது குஜாலுடன் காணப்பட்டான். படத்தின் இயக்குனர் பெயரை போஸ்டேரில் தேடினேன் ."பே .....ரரசு". "ஐயோ ! சும்மாவே இவன் "Somersault" அடிப்பான், தீபாவளினா கண்டிப்பா திருவிழா கொண்டாடாமவிடமாட்டான்" என்று மனதை திடப்படுத்திக் கொண்டு ஒரு மூன்று மணி நேர ஆயுள் தண்டனைக்கு தயாரானேன்.மணி ஒலித்தது."வாடா ! போலா !" என்றான் ஐயப்பன்.உள்ளே சென்றோம்.
படம் தொடங்கியது. ஓடியது,ஓடியது,ஓடிகொண்டே இருந்தது . மூன்று மணிநேரத்திற்கு பிறகு ! மணி 12:30.திரை அரங்கினை விட்டு வெளியே வந்தேன் சிறிது மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில். அவ்வாறு இருந்தது அப்படம். "படம் செம சூப்பர் டா ! படத்தோட பெயர் அப்படி " என்று ஊர் பெயர் சொல்லி மார்தட்டிக் கொண்டான் ஐயப்பன்."சரி விடு டா ! இப்போ என்ன ப்ரோக்ராம் " என்றேன்.உடனே என் நண்பன் பிரேமிடம் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு ."மச்சி ! எங்க இருக்கடா !" என்றான்."இப்பதான்டா படம் முடிஞ்சிது " என்றேன். "அப்போ எங்க வீட்டுக்கு வந்துருடா ! எவளோ நேரம் ஆகும் ?" என்றான். அய்யப்பனிடம் அனுமதி வாங்கிவிட்டு "பிரேமு ! இன்னும் முப்பத்து நிமிஷத்துல அங்க இருப்போம்டா " என்றேன்."சரிடா ! வந்துட்டு கால் பண்ணு !"என்றான்.
இருவரும் ஆட்டோவில் ஏறி பிரேமின் அபார்ட்மென்ட் நோக்கி சென்றது கொண்டிருந்தோம்.மணி இரவு 1. அபார்ட்மென்ட் வாசலை அடைந்தோம். எனது உயர வாசல் கதவு சங்கிலியால் பூட்டபட்டு இருந்தது."பிரேமு ! வந்துடோம்டா !" என்று தொலைபேசி மூலம் அழைத்தேன்." 2 நிமிஷம் மச்சி" என்றான். நானும் ,அய்யப்பனும் ரோட்டை அளந்து கொண்டிருந்தோம்."மச்சி ! என்னடா இன்னும் ஆள காணல !" என்று கதவு மேல ஏறுவது போல் படம் போட்டேன். "பொறுடா ! வருவான் !" என்றான் ஐயப்பன். "டேய் ! எனக்கு பிஸ் வருது டா ! நா போய் டவுன்லோட் பண்ணிட்டு வரேன்டா " என்று ஓரமாய் ஒதுங்கினேன்.திடீரென்று சாலையில் மாநகர காவலர்கள் ஜீப் ரோந்து வண்டு கொண்டிருந்தது .ஐயப்பன் அபார்ட்மென்ட் முன் நிற்பதை பார்த்தவுடன் வண்டியை நிறுத்தினர்." டேய் ! இங்க வாடா !" என்று மிக மரியாதையுடன் அய்யப்பனை அழைத்தனர். அவனை அழைத்ததைக் கண்டவுடன் எனக்கு பிஸ் நின்றுவிட்டது."என்னடா ! உனக்கு தனியா வெத்தல பாக்கு வைக்கணுமா ! வாடா " என்று என்னையும் அழைத்தனர். "ஆஹா ! இன்று சனி சடுகுடு ஆட ஆரம்பித்து விட்டது " என்று என்னுள் ஒரு எண்ணம் . " என்னடா பண்றீங்க இங்க , மணி ஒன்னு ஆச்சி " என்றார் ஏட்டு ஒருவர் . "சார் ! friend வீடு இங்க இருக்கு சார் ,அவன் உள்ளருந்து வந்துட்டு இருக்கான் சார் " என்று வார்த்தைக்கு வார்த்தை சார் போட ஆரம்பித்தேன்."ஆமாடா ! இன்னைக்கு friend வீடுன்னு சொல்லிட்டு அவன் வீட்டுக்கு போவீங்க ! நாளைக்கு அவன் எங்ககிட்ட வந்து "செல் போன் காணல ! underwear காணலனு எங்ககிட்ட வந்து கம்ப்ளைன்ட் குடுத்து எங்க தாலிய அறுப்பான்.இதுவே உங்களுக்கு வேலைய போச்சு ! ஏறுங்கடா வண்டியில " என்று மிரட்டினார்.அதுவரை விஷயத்தின் வீரியத்தை உணராத எனக்கு அடிவயிற்றில் புளியை கரைக்க ஆரம்பித்தது. எனது கற்பனை குதிரையின் ஓட்டம் படுவேகமா இருந்த காரணத்தால் என் கண்முன் ஒரு கற்பனை திரை தோன்றியது.அதில் நானும் ,அய்யப்பனும் ஜெயிலில் underwearருடன் அடி வாங்கும் காட்சி.இதில் ஐயப்பன் அடி வாங்கி துள்ளி குதிப்பதைப் பார்த்து எனக்கு சிரிப்பு வேற." சுயநினைவுக்கு மீண்டும் வந்தேன் ."டேய் ! பிரேமு! 2 நிமிஷத்துல வரேன்னு சொன்னியேடா !! எங்கடா போனே " என்று மனதிற்குள் கதறினேன்.
"ஏறுங்கடா! உள்ள! " மீண்டும் உறுமல் எங்களை உலுக்கியது . "சார் ! நாங்க IT கம்பெனியில வொர்க் பண்றோம் சார் . படம் பார்த்துட்டு வரோம் சார். வேணும்னா விசிடிங் கார்ட பாருங்க சார் " என்றேன். " ஓஹோ ! நீங்க தான் 20 வயசில 40 ஆயிரம் சம்பளம் வாங்குரவங்களா !! உங்களுக்கெல்லாம் சம்பாதிக்கிறோம்கிற மப்புடா !"என்றார் . கழுத்திற்கு கத்தி நெருங்கிக் கொண்டிருப்பதை உணர்ந்தேன் . "பேசாம ரெண்டு பெரும் மூடிட்டு வண்டிக்குள்ள ஏறுங்க" என்று வாயை பொத்தி சைகை செய்தார் .அதுவரை அமைதியாய் இருந்த ஐயப்பன் சிறிது கிளர்ச்சி அடைந்தான்."எதுக்கு சார் ! நாங்க வரணும் . நாங்க என்ன தப்பு செஞ்சோம் .! அதெல்லாம் வர முடியாது "என்று எகிறினான். கண நேரத்தில் ஐயப்பனின் சட்டை காலரை கைப்பற்றினார் ஏட்டு."சர் !! சர்க்!! டர் !!" என்று சட்டை காலர் கிழியும் சத்தம்." என்னடா ! சின்ன பையன்னு பாத்த ரொம்ப துள்ற !! அப்படியே பொடதியில ஒன்னு போட்டேன்னு வை மவனே ! ஏறு டா உள்ள !" என்றார். இதைக் கண்ட என் கண்கள் சிவந்தன ! ரத்தம் கொதித்தது ! நரம்புகள் முறுக்கேறின !"இந்தியன் தாத்தா முதல் முதல்வன் வரை அத்தனை கதாபாத்திரங்களும் என்னை உள்ளிருந்து உந்தித்தள்ளின. ஆனால் ஐயப்பன் சட்டை காலர் கிழிந்த சத்தம் மீண்டும் மீண்டும் என் காதில் "சர்!!சர்க்!!டர் !" என்று ஒலித்து கொண்டே இருந்தது . அமைதியாக வண்டிக்குள் சென்று அமர்ந்து கொண்டேன்.உடனே ஏட்டு அய்யப்பனை பார்த்து "பாத்தியா ! அந்த பையன ! சொன்ன உடனே உள்ள போய் இருக்கான் . நீயும் போபா தம்பி" என்றார். ஐயப்பன் என் அருகில் அமர்ந்தான் . அவனது கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. வண்டி மெதுவாக நகர பிரேம் ஒரு முண்டா பனியன் ,ஒரு லுங்கியுடன் வெளியே எங்களை தேடிக் கொண்டிருந்தான். என்னை அறியாமல் "மச்சி " என்று வண்டிக்குள் இருந்து கைக்காட்டினேன். “டேய் ! என்னடா போலீஸ் வண்டியிலயே லிப்ட் வாங்கிட்டு வந்துடீங்களா !" என்று சொல்லிக்கொண்டு ஓடிவந்தான்."யாருபா நீ " என்றார் ஏட்டு ." சார் ! இவங்க என் friends " என்றான் பிரேம்."சரி போலீஸ் ஸ்டேஷனக்கு வந்து லெட்டர் எழுதி குடுத்திட்டு ரெண்டு பேரையும் கூட்டிட்டு போ !" என்றார். வண்டி வேகமாக நகர்ந்தது .அருகில் ஐயப்பன் அழுதுகொண்டிருந்தான்.எனக்கோ மனதில் எண்ண ஓட்டங்கள். சாலையில் நான்கு இளைஞர்கள் சென்று கொண்டிருந்தார்கள்.அவர்களிடமும் காவலர்கள் அதே மிரட்டலை விடுத்தார்கள். அவர்கள் ஏதோ புரியாத வடநாட்டு மொழியில் "மங்கீசா ! கிங்கீசா ! கிங்கீசா ! பாயாசா !" என்று பதில் அளித்தனர். உடனே ஏட்டு "விடு. வண்டில எடமில்ல !! ஒழுங்கா வீடு போய் சேருங்கடா !" என்றார். எனக்குள் பெரும் அதிர்ச்சி .அட பாவிகளா ! இது தெரிந்திருந்தா நம்மளும் நமக்கு தெரிந்த ஹிந்தி ல " ஏக் காவ் மெய்ன் ஏக் கிசான் ரகுதாத்தா !" என்று பேசி தப்பி இருக்கலாமோ ?" என்று எண்ணினேன். ஆனால் எனது திராவிட நிறமும் ,என் முகத்தில் தாண்டவமாடும் தமிழன் என்ற ரேகையும் கண்டிப்பாக எனக்கு தர்ம அடி வாங்கிக் கொடுத்திருக்கும் என்பது உறுதி. வண்டி ஸ்டேஷன் அடைந்தது . எங்களின் அங்க அடையாளங்கள் எழுதப் பட்டது .சரியாக ஒரு மணி நேரம் கழித்து பிரேம் வந்தான். கம்ப்ளைன்ட் எழுதிய பிறகு எங்களை அழைத்து செல்ல அனுமதித்தார்கள்."சார் ! பேரை வச்சி ஒன்னும் பண்ணிடாதீங்க சார் !" என்றேன் ."அட ! இதெல்லாம் சும்மா ஒரு கணக்கு காட்டுறதுக்கு தா !! வேற ஒன்னும் இல்ல ! சரி கொஞ்சம் பாத்து செஞ்சிட்டு போங்க " என்றார் ஏட்டு . எதிரே இருந்த போர்டு டை நானும் பிரேமும் நோக்கினோம் அதில் "சென்னை மாநகர காவல் நிலையம் " முதல் வரியில் . இரண்டாம் வரியில் "பழக இனிமை !! பணியில் நேர்மை !" . இது என்ன கொடுமை என்று நினைத்துக்கொண்டு பிரேம் ஒரு நூறு ரூபாய் கொடுத்தான் .உடனே போட்டார் ஒரு மாஸ்டர் சலுட் .பணம் பேசுகிறது. மணி 3 . பிரேம் வீட்டிற்க்கு வந்து நிம்மதியாக பிஸ் அடித்து விட்டு தூங்க ஆரம்பித்தேன் .
காலை 10 மணி செல் போன் அலறியது.அழைப்பு என் நண்பன் ரங்கராஜன் திருநெல்வேலியில் இருந்து. "சொல்றா !" என்றேன் தூக்க கலக்கத்தோடு ."என்னடா ! நேத்து நைட் தியேட்டர் ல ஏதோ பொண்ணுங்ககிட்ட சில்மிஷம் பண்ணிடீங்கலாமே ! போலீஸ் stationனுக்கு போநேங்கலாமா ? ! எப்படியோ History ல வந்துடீங்க டா !" என்றான் . எழுந்து பார்த்தேன். பிரேமும் ,அய்யப்பனும் அருகில் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தார்கள் ."கிரி" வடிவேலு பாணியில் " அட பாவிகளா ! நைட் புல்லா நம்ம கூட தான இருந்தானுங்க ! அதுக்குள்ள எப்படி மேட்டர் திருநெல்வேலி வர போச்சி " என்ற அதிர்ச்சியுடன் "அட ! அது ஒன்னும் இல்ல மச்சி நேத்து நைட்."என்று முழு கதையையும் அவனிடம் சொல்ல ஆரம்பித்தேன் சின்ன புன்சிரிப்போடு. Download As PDF

Tuesday, August 11, 2009

அய்யனாரும் ஆக்கரும் !

இடம்: மெப்கோ பொறியியல் கல்லூரி

நேரம்: இரவு 7.37

கிழமை: சனி (அன்று எனக்கு 7 1/2 என்று அறிந்திருக்கவில்லை)



எனது வாழ்வின் மிக முக்கியமான 4 வருடங்கள் . அந்த 4 வருடங்களுக்கு மட்டும் என்னை என் பெற்றோர் மெப்கோ கல்லூரிக்குத் தாரைவார்த்து கொடுத்தார்கள் , மகன் ஒரு பொறியாளனாய் வெளிவருவான் என்ற நம்பிக்கையில். அங்கு நடந்த சில மறக்க முடியாத நிகழ்வுகளில் ஒன்றை இங்கு பதிவுசெய்கிறேன் .
பொதுவாக எங்கள் கல்லூரி உணவு மிகவும் நன்றாக உள்ளது என்று பல விடுதி மாணவர்கள் சொல்லக்கேட்டுருகிறேன்.ஆனால் எனக்கு உணவு சுத்தமாகப் பிடிக்கவில்லை.சில மாணவர்கள் மொக்க பொங்கலைக் கூட மூன்று நான்கு முறை வாங்கி அதில் சட்னியையும் சாம்பாரையும் அபிஷேகம் செய்து ஒரு கலை நயத்தோடு உண்பார்கள். ஏனோ! இந்த நாகர்கோயில் நாக்கிற்கு மட்டும் உணவு பிடிக்கவில்லை .என்றெல்லாம் பிடிக்காத உணவு போடுகிறார்களோ அன்றெல்லாம் எனக்கு காக்கும் தெய்வமாய் நினைவுக்கு வருவது சிவகாசியில் உள்ள விஜயம் மற்றும் அப்பன் மெஸ் தான். விலை குறைவு ! நல்ல சுவை !! இது போதாதா ! நண்பர்கள் கூட்டத்தோடு சிவகாசி பயணம் தான்.
மேற் குறிப்பிட்ட கிழமை மற்றும் நேரம். நானும் எனது நெருங்கிய நண்பன் மதனும் வெளியே சென்று உணவு உண்ணலாம் என்று முடிவு செய்தோம் .எங்கள் கல்லூரியில் உள்ள விதிமுறைகளுள் ஒன்று மாணவர்கள் அனைவரும் இரவு 8 மணிக்குள் விடுதிக்கு வந்துவிட வேண்டும். நானும் மதனும் கல்லூரியின் வெளியே 1.5 மைல் தொலைவில் உள்ள தெருமுனை ஹோட்டலுக்கு சென்று சாப்பிடலாம் என்று கல்லூரியயை விட்டு கிளம்பினோம் .அப்போது மணி 8.14 . வெளியே சென்று பார்த்த இருவருக்கும் ஏமாற்றம்.அன்று அந்த இரு ஹோடேல்களும் ஏதோ ஊர் திருவிழா காரணமாக விடுமுறை . நான் மதனை நோக்க! மதன் என்னை நோக்க ! இருவரும் எதிரே "சிவகாசி" என்று எழுதப்பட்ட பலகையை நோக்க! ஏறினோம் சிவகாசி பேருந்தில் . பயம் சிறிது என்னை ஆட்கொண்டது .கல்லூரி திரும்ப எப்படியும் 2 மணி நேரம் ஆகும் . இதை மதனிடம் தெரிவிக்க அவன் "விடு மச்சி ! இதெல்லா சப்ப மேட்டர் ! நம்ம final year மாமூ ! இதுக்கெல்லாம் பயப்படலாமா ? என்றான் . ஆகா !! நம்மோடு ஒரு வீரன் இருக்கிறான் என்ற தைரியத்தோடு அப்பன் மெஸ் உணவைப் பற்றி கனா காண ஆரம்பித்தேன் .வாரத்தின் ஏழு நாட்களுக்கு மட்டும் சுத்த அசைவம் சாப்பிடும் பழக்கம கொண்ட நாங்கள் இருவரும் உணவை பேருந்திலேயே தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தோம் . இறுதியில் அடைந்தோம் அப்பன்சை ! உண்டோம் "சுத்த அசைவம் " ! அடைந்தோம் "பரவச நிலை ". கல்லூரிக்குத் திரும்புகையில் பயம் மீண்டும் என்னைப் பற்றிக் கொண்டது .ஒவ்வொரு மைல் கல்லை பார்க்கும்போதும் பயம் வேகமாக முன்னேறிக்கொண்டு இருந்தது . கல்லூரி நிறுத்தத்தில் இறங்கியதும் "நீ இன்னைக்கு தர்ம அடி வாங்க போரே !” என்று ஒரு அசிரிரீ எனக்குள் .
கல்லூரி வாயிலை அடைந்தோம் . காவலர் "என்னபா!! பத்து நிமிஷத்துல வந்துருவோம்ன்னு சொல்லிட்டு போனீங்க . இப்ப மணி என்னை தெரியும்ல ? " என்றார் . மதன் "மணி பத்து! " என்றான் . "நீங்கல்லாம் ஆஸ்டேல் ல போடுற சாப்பாட்டை சாப்ட மாடீங்களா " என்றார் காவலர் சிறிது காட்டமாக !
நான் பதிலேதும் பேசாமல் நின்றேன் .உடனே மதனின் உள்ளிருந்த சிவகங்கை சிங்கம் என்ற வீரன் எம்பிக்குதித்து வெளியே வந்து "ஆஸ்டேல் ல போடுற சாப்பாடு நல்லா இருந்த நாங்க ஏன் வெளியே போய் சாப்புடுறோ!" என்றான் . எனக்கு சின்ன அதிர்ச்சி .காவலர் இந்த பதிலை எதிர்பார்க்கவில்லை. சிறிது கோபமுற்றார். "ஒஹோ! மூணு வருஷமா இந்த சாப்பட தான சாப்டீங்க ! நாலாவது வருஷம் மட்டும் பிடிக்காமா போச்சா ! எல்லாம் final year கிற திமிரு " என்றார் .வார்டேன் கிட்ட சொன்ன என்ன ஆகும் தெரியும் ல !" என்று உறுமினார் . ஒன்றும் பேசவில்லை இருவரும் .register ரில் கையொப்பம் இட்டுவிட்டு ஆஸ்டேல்லை நோக்கி விரைந்தோம் .
மதன் என்னைப் பார்த்து "டேய் ! மச்சி ! இந்த watchman ல நம்மள HOD மாதிரி கேள்வி கேக்குறான் பாரு !! எல்லாத்தையும் போட்டு தள்ளனும் டா ! " என்றான் . நான் அவனை ஆமோதிக்கும் வகையில் "விடு ! மாப்ள ! சில்ற பசங்க " என்றேன் ." இல்ல மச்சி ! இந்த வார்டேன் பயலுக்கு ஒரு நாள் மண்டையில நாலு ஆக்கர் போட்ட தான் சரிபட்டுவருவான் டா " என்றான் மிகுந்த ஜெர்கோடு. இருவரும் பலமாக சிரித்தோம் .ஆஸ்டேல் வாசலை அடைந்த இருவருக்கும் அதிர்ச்சி . வாயிலில் அய்யனாரையும் ,பிள்ளையாரையும் கலந்து செய்த கலவையாக Deputy வார்டேன் ஆஜானுபாகுவாய் நின்று கொண்டிருந்தார் ."என்ன பா ! இவளோ நேரம் எங்க போயிருந்தீங்க ! மணி பத்து ஆச்சு ! " என்று கேட்டார் . இருவருக்கும் வாரத்தை வரவில்லை . "சொல்லுங்க பா ! வாயில என்ன கொலகட்டயா ?" என்று மிரட்டினார். " இல்ல சார் ! சிவகாசிக்கு சாப்ட போனோம் !" என்றேன் ."ஒஹோ! துரைங்க இங்க சாப்ட மாடீங்க . அமைதி ஆட்கொண்டது இருவரிடமும் ."

"என்ன சாப்டீங்க " என்றார் .
"பட்டர் சிக்கன் , போரோடா !" என்றான் மதன்
"எவளோ பில் ? " என்றார்.
" 112 ரூவா " என்றேன் .
"அப்போ ஒருத்தர் 56 ரூபாய்க்கு சாபபிடுருகுறீங்க " என்று தனது கணித திறமையயை காட்டினார். இங்க ஆஸ்டேல் ல ஒரு நாளைக்கு சாப்பாடு 23 ரூபாய்க்கு போடுறோம் . நீங்க பணதிமிருல இதெல்லாம் சாப்பிட மாடீங்க " என்று இல்லாத ஒன்றை இருப்பதாக சொன்னார் ."ஆமா ! place ஆகிடீங்களா ? " என்றார் . உடனே மதன் "அவன் place ஆகிட்டான் . நான் இன்னும் ஆகல " என்றான் மிக பவ்யமாக (பம்மலாக) .
"எந்த கம்பெனி ?" என்றார்.
"HCL" என்றேன் .
" உங்க ரெண்டு பேர்ல "இங்க போடுற சாப்பாடு எல்லாம் மனுஷன் சாப்டுவானா ? " என்று watchman கிட்ட சொன்னது " என்றார் .
"ஆகா ! watchman வேலையயை காட்டிவிட்டார் " என்று இருவரும் மனதில் நினைத்துக் கொண்டோம் .
வார்டேன் இருவரையும் சற்று உற்று நோக்கினார் . "எனக்கு "நீ தான் அப்படி சொல்லிருப்பேன்னு தோணுது " என்று என்னை நோக்கி கைநீட்டினார் . எனக்கு பெரும் அதிர்ச்சி .உடனே மதனை நோக்கினேன் . அவனோ "SHREK" படத்தில் வரும் பூனை போல முகத்தை பாவமாக வைத்துக் கொண்டான் .
"எந்த ஊரு நீ? " என்னிடம் .
"நாகர்கோயில் " என்றேன் .
"அது தான பாத்தேன் ! அந்த ஊருக்குள்ள திமிரு உன்கிட்ட இருக்கு " என்று சொல்லி என் ஊரையும் கேவல படுத்தினார். " நீயெல்லாம் வாழ்நாள்ல சாப்பாடுக்கு கஷ்டப்பட போரே பாரு ! போ போ ! " என்றார். "இது கலி காலம் சார் ! பத்தினி சாபமே பலிக்காது ! உன்ன மாதிரி பன்னியின் சாபமா பலிக்க போகிறது போடா ! " என்று உறுமினேன் மனதிற்குள் . இருவரும் தங்களது அறையை நோக்கி சென்று கொண்டிருந்தோம் சிறிது கவலையோடு . உடனே மதன் "விடு மச்சி ! அவன் ஒரு டிஞ்சர் வாயன் ! இதுக்கு மேல ஒரு வார்த்த பேசிருந்தான் அவன் மண்டையில ஒரு ஆக்கர போட்ருபேன் " என்றான் . "அட பாவி ! நாப்பது நிமிஷம் நம்மகிட்ட ரம்பம் போட்டான் ! . நீ ஒரு வார்த்த கூட பேசல ! வெளியிலே ஜெர்க் க பேசிட்டு ! உள்ள செம பம்மு பம்மிட்டு ! இப்போ மறுபடியும் ஜெர்க் க " என்றேன் . " விடு மச்சி ! சப்ப மேட்டர் ! ப்ரீயா விடு !ப்ரீயா விடு" என்றான் . மீண்டும் பலத்த சிரிப்புடன் அவரவர் அறையை அடைந்தோம். Download As PDF